tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய குடிமைப் பதிவேட்டை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (டிச.19) வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கே.எம்.ஜவாஹிருல்லா உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்.  மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை, திரைக்கலைஞர் சித்தார்த், கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டு பல்வேறு சமூக சிந்தனையாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்