tamilnadu

img

காஷ்மீரில் ஜனநாயக படுகொலை: திருமா

சென்னை, ஆக.6- காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து  சிறப்பு அந்தஸ்தை நீக்கியது ஜனநாயக படுகொலை என்று விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறி யுள்ளார்.  சென்னை மீனம்பாக்கம் விமான நிலை யத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி.,“ மத்திய  பாஜக அரசு மக்களவையில் பெரும்  பான்மையை பயன்படுத்தி கூட்டத்தொட ரில் ஏராளமான மக்கள் விரோத சட்டங் களை நிறைவேற்றியது. அடுத்து என்ன  செய்யப்போகிறது? என்ற அச்சத்தி லிருந்தபோது ஜம்மு-காஷ்மீரில் ஆயி ரக்கணக்கான ராணுவத்தை குவித்து ஊர டங்கு உத்தரவை பிறப்பித்தது. முன்னாள் அமைச்சர்களை வீட்டுக் காவலில் சிறையில் வைத்துள்ளது” என்றார். காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அந்தஸ்து வழங்கி அந்த மாநிலத்தை சேர்ந்த வேறு யாரும் நிலத்தை வாங்க முடியாத நிலை இருந்தது. ஆனால் அவற்றை தகர்த்து மாநிலத்தை 2 ஆக பிரித்து யூனியன் பிர தேசங்களாக அறிவித்து உள்ளனர். இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. அர சியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான பயங்  கரவாத நடவடிக்கையாகும் என்றும் அவர் கூறினார்.