சென்னை,பிப்.27- தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில அமைப் பாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாது காப்பு சங்க மாநில அமைப்புக்குழு கூட்டம் பிப்ரவரி 27 அன்று தாம் பரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில அமைப்புக்குழு உறுப்பினர் எம்.நடராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா ளர் பெ.சண்முகம் பங்கேற்றார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாது காப்பு சங்கத்தின் முதல் மாநில மாநாட்டை எதிர்வரும் மார்ச் 27,28 தேதி களில் திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
பல தலைமுறைகளாக கோவில் இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கேட்டு, அரசை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வந்த நிலை யில் தமிழக அரசு அரசாணை 318 வெளி யிட்டு அதில் நீண்ட காலமாக கோவில் இடத்தில் குடியிருப்பவர்களை கணக்கிட்டு, ஆய்வு செய்து, அற நிலையத்துறையின் ஒப்புதலைப் பெற்று அந்த இடங்களுக்கான உரிய தொகையை கொடுத்து விட்டு அந்த இடங்களை வரன்முறைப்படுத்தி ஏழைகளுக்கு வழங்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணை 318-ஐ செயல்படுத்தக் கூடாது என தொட ரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித் துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 318-ஐ செயல்படுத்தும் வகையில் நீதிமன்றத்தில் உரிய முறையில் அரசின் நியாயமான, ஏழை எளிய மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி தான் போட்ட அரசாணையை செயல்படுத்திட உரிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் வெளி யிட்டுள்ள உத்தரவில் தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போர், வணிகம் செய்வோர், சாகுபடி செய்வோருக்கு வாடகை/ குத்தகையை தீர்மானிப்ப தற்கு சந்தை மதிப்பின்படி தீர்மானிக்க உத்தரவிட்டுள்ளதை ரத்து செய்து அரசாணை எண்.298-ன் படி வாடகை உயர்வினை தீர்மானிக்காமல் தன் னிச்சையாக சந்தை மதிப்பில் புதிய தாக வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.