tamilnadu

img

தர்பார் பட விநியோகிஸ்தர்கள் மிரட்டுவதாக ஏ.ஆர். முருகதாஸ் புகார்

சென்னை, பிப்.6- தர்பார் படத்தின் விநியோகிஸ் தர்கள் இழப்பீடு கோரி தன்னை மிரட்டு வதால் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்கு நர் ஏ.ஆர். முருகதாஸ் மனு அளித்துள் ளார்.      ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந் தோஷ் சிவன். இசை - அனிருத். தயா ரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினி யின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, `ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியானது. முதல் நான்கு நாள்க ளில் தர்பார் படம் ரூ. 150 கோடி வசூ லித்ததாக லைகா நிறுவனம் தகவல் வெளியிட்டது. 

ஆனால், தர்பார் படம் எதிர்பார்த்த அளவில் வசூலை ஈட்டவில்லை என்கிற புகாருடன் ரஜினியை நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளார்கள் விநியோகிஸ்தர்கள். கடந்த வாரம், சென்னையிலுள்ள ரஜினியின் இல் லத்துக்கு நேரில் சென்று பார்க்கச் சென்றபோது அவர்களுக்கு அனு மதி கிடைக்கவில்லை. அதேபோல இந்த வாரமும் தர்பார் படத்தை வட ஆற்காடு - தென் ஆற்காடு, திருநெல் வேலி, மதுரை, செங்கல்பட்டு, கோயம் புத்தூர், சேலம் ஆகிய பகுதிகளில் விநியோகம் செய்த விநியோகிஸ்தர் கள் ரஜினி மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகிய இருவரையும் சந்திக்க முயன்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை யடுத்து, இதுபோல தொடர்ந்து அனு மதி மறுக்கப்பட்டால், வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருப் போம் என்று விநியோகிஸ்தர்கள் கூறி யுள்ளார்கள். தர்பார் படத்தின் விநியோ கிஸ்தர்கள் இழப்பீடு கோரி தன்னை மிரட்டுவதால் தனது வீடு மற்றும் அலு வலகத்துக்குப் பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருக தாஸ் மனு அளித்துள்ளார். இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை வியாழனன்று நடை பெற்றது. முருகதாஸின் மனு தொடர் பாக பிப்ரவரி 10ஆம்  தேதிக்குள் காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.