tamilnadu

img

சூடான் தீ விபத்தில் கடலூர் வாலிபர் பலி: சோகத்தில் கிராமம்

கடலூர், டிச.5- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தைச் சேர்ந்த  முருகன் மகன் ராஜசேகர். இவர்  விருத்தாசலம் பீங்கான் தொழிற் சாலையின் கல்லூரியில் டிப்ளமோ படித்துவிட்டு கடந்த 2017ஆம் ஆண்டு  சூடான் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு இவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு  தமிழகம் வந்த அவர், ஜனவரி மாதம் சூடான் நாட்டிற்கு சென்றுள்  ளார். இந்நிலையில், ராஜசேகர் மனைவி கலைச்சுந்தரி  ராஜசேகரி டம் வீடியோ காலில் பேசிக் கொண்  டிருக்கும் போது திடீரென்று அவரு டைய மொபைலில் இருந்து வெடி சத்தம் கேட்டுள்ளது. உறவினர் களோ புகை மண்டலமாக இருந்த தாக கூறுகிறார். 

பின்னர்தான் அவர் மரணம டைந்தது தெரியவந்தது. ராஜ சேகருக்கு மூன்று வயதில் ஒரு  பெண் குழந்தை உள்ளது. ராஜசேக ரின் உடலை தமிழகம் கொண்டு வர  வேண்டுமென அவரது உறவினர் கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு  கொடுத்துள்ளனர். சூடான் நாட்டில்  பணியாற்றி வந்த ராஜசேகர் பலி யானதால் மானடிகுப்பம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

;