tamilnadu

img

பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு

உடனடியாக சோதனை நடத்திடுக:  தீக்கதிர் ஆசிரியர் வேண்டுகோள்

மதுரை, ஏப்.21- தீக்கதிர் நாளேட் டின் ஆசிரியர் மதுக் கூர் இராமலிங்கம் செவ்வாயன்று வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதா வது:

கொரோனா நோய்த் தொற்றை எதிர்த்து போராடி வருகிற மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை யினர் உள்ளிட்ட மருத்துவப் பணி யாளர்கள், அரசுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மிகுந்த  நன்றிக்குரியவர்கள்.  அவர்கள் ஆற்றி வருகிற மகத்தான பணியை எவ் வளவு பாராட்டினாலும் தகும். அதேபோல இந்த நெருக்கடியான நேரத் தில் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களும் அயர் வற்ற பணியாற்றி வரு கின்றனர். தகவல்களை உடனுக்குடன் மக்களி டம் கொண்டு செல்வதி லும் விழிப்புணர்வு ஏற் படுத்துவதிலும் இவர்களும் இரவு -பகலாக பணியாற்றி வருகின்ற னர்.

இந்த நிலையில் இரண்டு பத்தி ரிகையாளர்களுக்கு கொரோனா  நோய்த்தொற்று இருப்பது கண்ட  றியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூரிலும் ஒரு பத்திரிகையாளர் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் சுமார் 30 பத்திரிகையாளர்களுக்கு தொற்று இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.மும்பையில் 53 பத்திரிகையாளர்கள் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லை என்பது நிலைமையை மேலும் விபரீதமாக்குகிறது.

சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதை யறிந்து அனைத்து பத்திரிகையாளர்களுக் கும் முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. இதேபோல தமிழகம் முழுவதும் ஊட கத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு குறிப் பாக களத்தில் சென்று பணியாற்றும் அனைத்து செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் அனைவருக்கும் உட னடியாக நோய்த்தொற்று குறித்த பரி சோதனை செய்யப்படவேண்டியது அவசிய மாகும்.

அரசும் இயன்றவரை நேரடியான செய்தி யாளர்கள் சந்திப்பை தவிர்ப்பதோடு அனைத்துத் தரப்பினருக்கும் இதை அறிவுறுத்த வேண்டும். தேவையான செய்தி களை இணையதளம் மற்றும் சமூக ஊட கங்கள் வழியாக தெரிவிக்க வேண்டும்.

நெருக்கடியான இந்தக் காலத்தில் பல் வேறு ஊடகங்களும் செய்தித்தாள்களும் தங்களது ஊழியர்களை வேலையிலிருந்து வெளியே அனுப்புவது என்பது கொடூரமான ஒன்றாகும். ஊதியத்தை பிடிப்பது, குறைப் பது போன்ற நடவடிக்கைகள் பல்வேறு நிறு வனங்களில் நடந்துவருகிறது. இது உடனடி யாக நிறுத்தப்படவேண்டும். ஊதியத்தை நிறுத்துவது, வேலை நீக்கம் செய்வது போன்ற வற்றை எந்தத்துறையிலும் செய்யக்கூடாது என்பதை மத்திய-மாநில அரசுகள் வெறும் அறிவுறுத்தலாக மட்டுமின்றி உத்தரவாகப் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.