tamilnadu

img

புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட  8 மாவட்டங்களில்  கொரோனா ஆய்வகங்கள்

 8 மாவட்டங்களில் கொரோனா ஆய்வகங்கள்

புதுக்கோட்டை, ஏப்.6- புதுக்கோட்டை, தஞ்சாகூர், கன்னியாகுமரி உள் ளிட்ட 8 மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய அமைச்சர், மத்திய அரசின் ஒப்புதலுக் குப்பின், ஆய்வகங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்றார் . தமிழகத்தில் கொரோனா சமூக தொற்றாக மாறிவிடாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக அவர் தெரிவித்தார்.

உணர்வால் ஒன்றிணைந்து அரசின் விதிமுறை களை பின்பற்றி கொரோனா நோய்த்தொற்றை கட்டுப் படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு, தமிழக மக் களை, அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.