மதுரை, ஏப்.18- தமிழகத்தில் சனிக்கிழமை 49 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளியன்று 56 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,323-லிருந்து 1,372 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை 5,363 பேருக்கு ரத்தமாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-
தமிழகத்தில் இதுவரை 35,036 சாம் பிள்கள் சோதனை செய்யப்பட் டுள்ளன. நபர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் 26,997 பேருக்கு சோதனை செய்யப்பட் டுள்ளது. சனிக்கிழமை கொரோனா பாதித்த 49 பேரில் நான்கு பேருக்கு அதி தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. மற்ற வர்கள் நலமாக உள்ளளனர். தமிழகத்தில் 21 அரசு ஆய்வகங்கள், 10 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 31 ஆய்வகங்கள் உள்ளன. சனிக் கிழமை 82 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டனர். இதுவரை மொத்தம் 365 பேர் வீட்டிற்கு சென் றுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.1 என்ற அளவில் உள்ளது. சிகிச்சையில் 1,007 பேர் உள்ளனர்.
சனிக்கிழமை கண்டறியப்பட்ட சோதனையில் அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு தொற்றிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை யில் ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் கோயம்புத்தூர், திருநெல்வேலி, தென்காசி, பெரம்பலூர் மாவட்டங்க ளைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.