தமிழகத்தில் இன்று 5,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,30,408 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,917 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 5,548 பேர் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 5,75,212 பேர் குணமடைந்துள்ளனர்.