tamilnadu

img

கொரோனா எதிரொலி: பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு!

கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதம் நடந்தது. அப்போது எதிர்க் கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், “ஏசியில் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் என்று கூறப்படும் நிலையில், சட்டமன்றத்தில் அதிகமாக ஏசி பயன்படுத்தப்படுகிறது.  கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலும்  கொரோனா பரவும் என்றும் கூறுகிறார்கள்.  சபை நிகழ்ச்சிகளை பார்வையிட பார்வை யாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், இங்கு உள்ளவர்களுக்கு முக கவசம் வழங்கி காப்பாற்றுங்கள்”என்றார். இதற்கு விளக்கம் அளித்த பேரவைத்  தலைவர் ப. தனபால், “சட்டப்பேரவைக்குள் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. முக கவசம் பயன்படுத்த தேவை  ஏற்படும் போது வழங்கப்படும். சபை நிகழ்ச்சி களை பார்வையிட வருகை தரும் பார்வையா ளர் வருகைக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்க  முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.