tamilnadu

img

ராஜீவ் குறித்து சர்ச்சைக் கருத்து: சீமான் மீது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது

தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை,அக்.16- சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், நாங்குநேரி தொகுதியில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் அலுவலர்களின் பயிற்சிக்கு பயன்படுத்துபவை. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வரிசை எண்கள் குறித்த விவரங்கள் ஏற்கெனவே அரசியல் கட்சியினருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், அவைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.