குடவாசல்:
தோழர் ஜீ.வி என்று தமிழக மக்களால் அன்போடும், பாசத்தோடும் அழைக்கப்பட்ட தோழர் கோ.வீரய்யன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் தோழர் ஜீவி நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினர்.
அவரது சொந்த ஊரான சித்தாடி கிராமத்தில் திங்கள் அன்று அவரின் நினைவிடத்தில் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில் செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் முன்னிலையில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து புகழ் அஞ்சலி செலுத்தினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், பி.மாரிமுத்து, ஐவி.நாகராஜன், தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், நாகை மாவட்டச் செயலாளர் நாகை மாலி, தீக்கதிர் திருச்சி பதிப்பு பொதுமேலாளர் எஸ்.பன்னீர்செல்வம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்ரமணியன், மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், தலைவர் எஸ்.தம்புசாமி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.கந்தசாமி, குடவாசல் பகுதி குழு ஒன்றியச் செயலாளர் ஆர்.லட்சுமி, வடக்குப்பகுதி ஒன்றிய செயலாளர் கே.அன்பழகன், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன், நீடாமங்கலம்ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம், வலங்கைமான் ஒன்றிய செயலாளர் என்.ராதா, நன்னிலம் ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன் மற்றும் சிபிஎம் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டக்குழு தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்சங்கம், இன்சூரன்ஸ் அரங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் மாபெரும் தலைவருக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்.
குடவாசல்
முதுபெரும் தோழர் ஜீவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குடவாசலில் பேரவை மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் மார்க்சிஸ்ட்,தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் எழுதிய விழித்துக் கொள்ளும் தருணம் என்கிற தலைப்பில் புத்தகத்தை மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து வெளியிட மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் பெற்றுக் கொண்டார். மாவட்டக்குழு உறுப்பினர்கள்,குடவாசல் வடக்கு, தெற்கு கொரடாச்சேரி, நீடாமங்கலம், நன்னிலம், வலங்கைமான் ஆகிய ஒன்றியங்களில் இருந்து திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக குடவாசல் கட்சி அலுவலகத்தில் தோழர் ஜீவி நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டது. இதனை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், பி.கந்தசாமி, எம்.கலைமணி, மூத்த தோழர் டி.ஐயாறு, சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமாரராஜா, மாதர்சங்க மாவட்டச் செயலாளர் கோமதி, இந்தியஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.எம்.சலாவுதீன் மற்றும் ஒன்றியக்குழு, நகர குழுவினர் கலந்து கொண்டனர்.டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகம்முழுவதும் தோழர் கோ.வீரய்யன் முதலாமாண்டு நினைவுதினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
குடவாசல் வட்டம் சித்தாடி கிராமத்தில் முதுபெரும் தலைவர் ஜி வீரையன் முதலாண்டு நினைவு தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமாரராஜா மற்றும் நிர்வாகிகள் நினைவிடத்துக்கு சென்று முதுபெரும் தலைவர் ஜி.வீரையன் படத்திற்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.