tamilnadu

img

தோழர் கே. ஹென்றி லாசரஸ் காலமானார்

தீக்கதிர் வேலூர் மாவட்ட செய்தியாளர் 

வேலூர், அக்.31- மூத்த பத்திரிகையாளர் தீக்கதிர் நாளிதழின் வேலூர் மாவட்ட செய்தியாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராணிப்பேட்டை  கிளைத் தோழருமான கே.ஹென்றி லாசரஸ் மாரடைப்பால் காலமானார் என்பதை துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 64. பெங்களூரில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக அக்டோபர் 29 அன்று சென்றிருந்தார். அக்.30 இரவு தமது மனைவியுடன் வேலூர் திரும்புவதற்காக பெங்களூரில் ரயில் ஏறியுள்ளார். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென மாரடைப்பு ஏற் பட்டு தோழர்  ஹென்றி உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த ரயில்வே காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஹென்றி யின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக பெங்களூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். 31.10.2019அன்று பிரேத பரிசோத னை முடித்து ஆம்புலன்ஸ்  மூலம் சொந்த ஊரான ராணிப்பேட்டைக்கு கொண்டு வந்தனர். எண்: 11/98, சீயோன் நகர், ராணிப்பேட்டை என்ற அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுள்ளது. ராணிப்  பேட்டை ரயில் நிலையம் அரு கிலுள்ள சியோன் நகரிலிருந்து நவம்பர் 1 (இன்று) வெள்ளிக்கிழமை நண்பகல் 1 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படு கிறது. அங்கிருந்து நாவல்பூர் வி.எம். தெரு, சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத் திற்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தோழர் கே. ஹென்றி லாசரஸ் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தீக்கதிர் நாளிதழின் வேலூர் மாவட்ட செய்தி யாளராக மிக திறம்பட பணியாற்றி வந்தவர். அவரது மறைவு ஈடுசெய்ய முடியதாக பெரும் இழப்பாகும்.  அவருக்கு சம்பூரணம் என்ற மனைவி உள்ளார். டேனியல், சாமு வேல் இரு மகன்கள். இதில், டேனியல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மரண டைந்தார். பொறியியல் பட்டதாரியான சாமுவேல் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

செயல் வீரருக்கு செவ்வணக்கம்

தோழர் ஹென்றி மறைவு குறித்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தீக்கதிர் நாளிதழின் மாவட்ட நிரு பராக செயல்பட்டு வந்த செயல் வீரர் தோழர் ஹென்றி. மக்கள் பிரச்சனைகளை பேசிக் கொண்டிருக்கும்போதே பிரச்சனைகளை விவா தத்திற்குரிய செய்தியாக மாற்றுவதில் வித்தியாச மான செயல்பாட்டாளர். இதழியல் துறையில் நேர்மையாக தனது பங்கை செலுத்தியவர் சமூக அவலங்களை செய்தியாக்கியவர். அனைத்து பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பதிலும், சங்க செயல்பாட்டிலும் சிறப்பான பங்கை செலுத்தியவர்.

நிருபராக மட்டுமின்றி ராணிப்பேட்டை பகுதியில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தீக்கதிர் விநியோக பொறுப்பையும் மேற் கொண்டவர். 2003 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், கிளைச்  செயலாளராகவும் கட்சி கடமையை திறம்படச் செய்தவர். அவரது இழப்பு குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, வேலூர் மாவட்ட செங்கொடி இயக் கத்திற்கும், தீக்கதிர் நாளிதழுக்கும் பேரி ழப்பாகும். தோழர் ஹென்றிக்கு செவ்வணக்கத் தையும் அவரை இழந்து வாடும் குடும்பத்தா ருக்கு  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றோம்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜனர்லிஸ்ட்ஸ் (டியுஜே) மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருசோத்தமன் வெளியிட்டிற்கும் இரங்கல் செய்தியில், “நமது சங்கத்தின் மாநில இணைச் செயலாளரும் மூத்த நிர்வாகியும், சிறந்த வழி காட்டி தோழருமான கே.ஹென்றியின் மறைவுச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளோம். சங்கத்தின் வளர்ச்சியில் அவரது பங்கு அளப்ப ரியதாகும். அவரது மறைவு சங்கத்திற்கு மட்டு மல்ல, பத்திரிகை உலகிற்கும் பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் தீக்கதிர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்க ளுக்கும் சங்கத்தின் சார்பில் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறி யுள்ளார். 

தீக்கதிர் ஊழியர்கள் இரங்கல்

தோழர் ஹென்றி மறைவுக்கு தீக்கதிர் ஊழியர்கள் சார்பில் ஆசிரியர் மதுக்கூர் இராம லிங்கம், முதன்மைப் பொது மேலாளர் க.கனக ராஜ், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனிவாசன், பொறுப்பாசிரியர்கள் எஸ்.பி. ராஜேந்திரன், எம்.கண்ணன், அ.விஜயகுமார், அ.ராஜா, பொது மேலாளர்கள் சி.கல்யாண சுந்தரம், எஸ்.ஏ.மாணிக்கம், எஸ்.பன்னீர் செல்வம், ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.