பாஜக எம்.பி.யைக் கண்டித்து ஆவேசம்:
திருப்பூர், ஆக.12 - பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்வோர் தேசத் துரோகி கள் என்று அபாண்டமாக பழி சுமத்திய கர்நாடக பாரதிய ஜனதா கட்சி எம்.பி. ஆனந்தகுமார் ஹெக் டேவைக் கண்டித்து பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல் அனைத்து பணியாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்வோர் தேசத் துரோகி கள், பிஎஸ்என்எல் நிறுவனத்தை விற்று விட வேண்டும் என்று ஆனந்த குமார் ஹெக்டே கூறியதை கண் டித்து புதனன்று திருப்பூர் பிரதான தொலைபேசி நிலையம் முன்பாக அனைத்து சங்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தலைவர் வாலீசன் தலைமை வகித் தார். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம், என்எப்பிடி நிர்வாகி அந்தோணி மரியபிர காஷ், பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் குருசாமி ஆகியோர் கண்டன உரையாற்றி னர். இதில் அனைத்து சங்க பணி யாளர்கள் திரளாகப் பங்கேற்று கண் டனம் முழங்கினர். அதேபோல் பல்லடம் தொலை பேசி நிலையம் முன்பாகவும் புதன் கிழமை பாஜக எம்.பி.யைக் கண் டித்து பெருந்திரளானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
கோவை
இதேபோல், கோவை பிஎஸ்என் எல் தலைமை அலுவலக வளாகம் மற்றும் பொள்ளாச்சியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குடியரசு, எப் என்னிஓ மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, ஏஐபிஎஸ்என்எல் மாவட்ட செயலாளர் காவெட்டி ரெங்கன், பிஎஸ்என்எல்யு மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் முகம்மது நிசார், அதிகாரிகள் சங்கத்தின் பொறுப் பாளர்கள் பி.பி.பாலாஜி, பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர் எஸ்.மனோகரன், ஓய்வூதியர் சங்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் வி.சசிதரன் உள்ளிட்ட திரளானோர் கலந்துக்கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம் ஜிம் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் ்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ.கோபால் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். இதே போல், சேலத்தில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் கிளைகள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
நீலகிரி
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஜேக்கப் மோரீஸ், என்எப்டிஇ மாவட்ட செயலாளர் ஆர்.ரங்கன், எஸ்என்இஏ மாவட்ட செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பிஸ் என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.