tamilnadu

img

மாணவர்களுக்கு காலை உணவு: ஆளுநர் தொடங்கி வைத்தார்

சென்னை,பிப்.15- அட்சய பாத்திரம் அறக்கட்டளை மூலம் கூடுதலாக 12,000  மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்து 5 கோடி ரூபாய் நிதி வழங்கினார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும், 5 ஆயிரம்  மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கும் பணியை, அட்சய  பாத்திரம் அறக்கட்டளை, கடந்த ஆண்டு பிப்ரவரியில் துவக்கி யது. மேலும் 12,000 மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை  உணவு வழங்கும் திட்டத்தை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், டி. ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, சரோஜா, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி “இந்த திட்டத்தை  மேலும் விரிவுபடுத்தும் வகையில் 2 சமையல் கூடங்கள்  அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டுள்ளது. மின் இணைப்பு, குடிநீர் கட்டணங்களை மாநக ராட்சியே செலுத்த அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.