tamilnadu

img

பி.இ. படித்தவர்களும் அரசுப் பள்ளிகளில் கணித ஆசிரியராகலாம்

சென்னை, டிச.10- பி.இ.படிப்பில் எந்த பாடத்  தைத் தேர்வு செய்து படித்தவர்க ளும் தமிழக அரசுப் பள்ளிகளில் இனி கணித ஆசிரியராகலாம் என்று தமிழக அரசு புதிய அர சாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசுப்பணிகளில் சேர  விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் அரசாணையில் உள்ள படிப்புகள் தவிரப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் புதிய படிப்புகளில் பட்டம் பெறுவதால் சான்றிதழ் சரிபார்ப்பில் பல்வேறு பிரச்சனை  இருந்து வருகிறது. இதனால் எந்தெந்த பட்டப் படிப்புகள் ஏற்கனவே உள்ள படிப்புகளுக்கு இணையானது என்பதை முடிவு செய்து அதன்  விவரத்தை வெளியிட வேண்டு மென உயர் கல்வித்துறைக்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கை கள் வைக்கப்பட்டன.

இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வி குழுமத்தின் ஆலோ சனைக் கூட்டம் கடந்த நவம்பர் மாதம் 6 ஆம் தேதியும்,12 ஆம் தேதியும் நடைபெற்றது. அதில் இணையான படிப்புகளின் பட்டியல் தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதையேற்று எந்தெந்த பட்டப்படிப்புகள் ஏற்கனவே உள்ள படிப்புகளுக்கு இணை யானது, எவை இணையான படிப்புகள் அல்ல என்ற விவ ரத்தை அரசாணையாகத் தமிழக அரசு தற்போது வெளி யிட்டுள்ளது. அதன்படி பி.இ படிப்பில் எந்த பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்து இருந்தாலும் அவர்கள் பி.எட். முடித்து பின்பு ஆசிரியர்  தகுதித் தேர்வான டெட் தேர்  வினை எழுதி அரசுப் பள்ளிகளில்  6, 7 மற்றும் 8 ஆகிய வகுப்பு களுக்குக் கணித ஆசிரியராக பணியாற்றலாம் என்று புதிய அர சாணையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு பி.இ படித்த வர்கள் பி.எட். படிப்பதற்கு மட்டுமே அனுமதி இருந்தது. ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வு எழுத அனு மதி கிடையாது. தமிழக அரசின்  புதிய அறிவிப்பின்கீழ், இனிமேல்  பி.இ. படித்து இருப்போரும், பி.எட். முடித்து, டெட் தேர்வு எழுதி,  அரசுப் பள்ளிகளில் கணித ஆசிரி யராக பணியாற்றலாம்.