கோவில்பட்டியில் எழுத்தாளர் சோ.தர்மனுக்கு தமுஎகச கவுரவத் தலைவர் ச.தமிழ்செல்வன், துணைப் பொதுச் செயலாளர் அ.லட்சுமிகாந்தன், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ராமசுப்பு உள்ளிட்ட தலைவர்கள் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்து சிறப்பித்தனர்.
புதுதில்லி,டிச.18- ‘சூல்’ நாவல் எழுதிய எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் சோ. தர்மராஜ் என்ற இயற்பெயர் கொண்டவர் எழுத்தாளர் சோ. தர்மன். இதுவரை கூகை, ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 நூல்களை எழுதியுள்ளார். எழுத்தாளர் தர்மன். கோவில்பட்டி அருகே உள்ள உருளைக்குடி பகுதியைசேர்ந்தவர். “கூகை” என்ற நாவலுக்காக ஏற்கனவே தமிழக அரசின் விருதை தர்மன் பெற்றுள் ளார். எழுத்தாளர் தர்மனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்கியுள்ளனர்.