tamilnadu

img

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்.4 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஆக.28- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 340 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்  டம்பர் 4 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க லாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறி வித்துள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் 2 ஆயிரத்து 340 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த  காலிப் பணியிடங்களுக்கு நேரடி நிய மனம் மூலம் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை  ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  முதுகலைப் பட்டப் படிப்புடன், நெட், செட் தேர்வில் தேர்ச்சி அல்லது பிஎச்டி முடித்த 57 வயதுக்கு உட்பட்டவர்கள் உதவிப் பேரா சிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி யுடையவர்கள்.

செப்டம்பர் 4 முதல் 24 ஆம் தேதி மாலை  5 மணி வரை www.trb.tn.nic.in என்ற ஆசி ரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்  ணப்பிக்கலாம். அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரிகளில் 73 பாடப்பிரிவுகளில் 2  ஆயிரத்து 340 உதவிப் பேராசிரியர் பணி யிடங்கள் காலியாக உள்ளது. அதிகபட்ச மாக ஆங்கிலப் பாடப்பிரிவில் 309 பணி யிடங்களும், தமிழ் பாடத்தில் 231 பணியிடங்க ளும் காலியாக உள்ளன. இதற்கு விண் ணப்பிக்க விரும்புவோர் உயர்கல்வித்துறை அங்கீகரித்துள்ள கல்வி நிறுவனங்களில் உள்ள 136 பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். நேரடி நியமனம் மூலம் தேர்வு செய் யப்படும் உதவிப் பேராசிரியர்களுக்கு மாத ஊதியமாக 57 ஆயிரத்து 700 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 400 ரூபாய் வரை  வழங்கப்படும். ஆன்லைன் மூலம் விண்  ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள் முழுவது மாக சரிபார்க்கப்பட்டு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று ஆசிரியர்  தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது. உதவிப்  பேராசிரியர் நியமனம் நேரடி முறையில் நடை பெறுவதால், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவே இறுதியானது என்றும் கூறியுள்ளது.