விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் தொற்றை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர் செயலாளர் எல்.முருகன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.