tamilnadu

img

ஆடிப்பட்டம் கைவிட்டுப் போனது நாற்றங்கால்களை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் கடைமடை விவசாயிகள்

தஞ்சாவூர்,ஆக.21-  தஞ்சை மாவட்டம், பேராவூ ரணி, சேதுபாவாசத்திரம் கடை மடைப் பகுதியில் ஆடிப்பட்டம் கைவிட்டுப் போன நிலையில், நாற்றங்கால்களை காப்பாற்ற கடைமடை விவசாயிகள் தடுமாறி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலை உள்ள தாக விவசாயிகள் வேதனை தெரி விக்கின்றனர்.  பேராவூரணி, சேதுபாவாசத் திரம் கடைமடை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு போகம் சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்நிலை யில் கடந்த 10 ஆண்டுகளில் கடந்த ஆண்டு தான் ஒருபோக சம்பா சாகுபடி கைகூடியது. காரணம் மேட்டூர் அணை தண்ணீர் போது மான அளவு கிடைக்காவிட்டா லும் எதிர்பாராத பருவமழையால் சாகுபடி முழுமையடைந்தது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் மேட்டூர் அணை ஜூன் 12 ல் திறக்கப்பட்டு ஜூன் 16 ஆம் தேதி கல்லணை டெல்டா பாசன சாகுபடிக்காக திறக்கப்பட்டது. இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கக்கூடிய ஆடிப்பட்டம் கைகூடும் என்ற மகிழ்ச்சியில் இருந்த கடைமடை விவசாயிகளின் கனவு கானல் நீராகி போனது.

100 அடியில் இருந்து திறக்கப் பட்ட மேட்டூர் அணை 65 அடியாக குறையும் அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டாலும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கடை மடைக்கு தண்ணீர் கிடைக்க வில்லை. 5 நாட்கள் வீதம் முறை வைத்து தண்ணீர் வழங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரி கள் கூறினாலும் ஒருமுறை கூட 5 நாட்கள் தண்ணீர் கிடைக்க வில்லை. இதனால் ஆடிப்பட்டம் நாற்று விடும் பணிகளை கடைமடை விவ சாயிகள் துவங்கவில்லை. மீண் டும் மேட்டூர் அணை 100 அடியை எட்டிய நிலையில் தற்போது பர வலாக நாற்றுவிட தொடங்கியுள் ளனர். 5 நாட்கள் தண்ணீர் வரும் என எதிர்பார்த்து நாற்றுவிட்ட விவசாயிகள் இரண்டே நாளில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் நாற்று விட்டு மூன்றாவது நாள் தண்ணீர் பாய்ச்சி கழிவு நீர் விட முடியாமல் நாற்றங்கால்களைக் காப்பாற்ற அருகிலுள்ள ஆழ் குழாய் கிணறுகளை தேடிச்செல்  லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அருகில் ஆழ்குழாய் கிணறு வசதியில்லாதவர்கள் நாற்றங் கால்களை காப்பாற்ற முடியாமல் தடுமாறி வருகின்றனர். மேட்டூர் அணை திறந்த நாள்முதல் முறைவைக்காமல் 30 நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என கடைமடை விவசாயிகள் கோரிக்கை வைத்தும் மாவட்ட ஆட்சியர் கடைமடையை கண்டு கொள்ளவில்லை என விவசாயி கள் வேதனை தெரிவித்துள்ளனர்.