சேலம்,நவ.3 மேட்டூர் அணைக்கு கூடுதல் நீர் வந்து கொண்டிருப்பதால் அணை யில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 8400 கனஅடியில் இருந்து 9400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு ள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால், மேட்டூர் அணைக்கு சில தினங்களுக்க முன்பு விநாடிக்கு 25,000 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இதனால் மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக கடந்த மாதம் 23ஆம் தேதி முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அணையில் இருந்து விநாடிக்கு 27,000 கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் காவிரி கரையோரத்தில் உள்ள சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், மற்றும் கடலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் கர்நாடகாவில் பெய்யும் மழையின் அளவு குறைந்ததால் தண்ணீர் வரத்தும் குறைந்தது. இந்தநிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 9000 கனஅடியில் இருந்து 9500 கனஅடியாக அதிகரித்து ள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 8400 கனஅடியில் இருந்து 9400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு ள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர்இருப்பு 93.47 டிஎம்சி.,யாகவும் உள்ளது.