tamilnadu

img

திருச்சி முகாம் சிறையில் 20 வெளிநாட்டு கைதிகள் தற்கொலை முயற்சி

திருச்சிராப்பள்ளி, நவ.8- திருச்சி மத்திய சிறை வளாகத்தில் முகாம் சிறை உள்ளது. இந்த முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் 37 பேர், வங்கதேசத்தினர் 30 பேர், சீனா,  பல்கேரியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 72 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள். இந்நிலையில் இச்சிறையை சேர்ந்த 46 பேர் வழக்கை விரைந்து முடித்து  தங்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கடந்த 7ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட் டனர். 2 வது நாளாக வெள்ளிக்கிழமை யும் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று திடீரென இதில் 20 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டு உண்ணாவிரதம் இருந்த இடத்தில் மயங்கியதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரிகள், சிறை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் 20 பேருக்கும் சிகிச்சை அளித்தனர்.   இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: போராட்டத் தில் ஈடுபட்டவர்களை நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு தான் வெளியே அனுப்பி வைக்க முடியும். இவர்களில் யாரும் தூக்க மாத்திரை சாப்பிடவில்லை. ஆனால் தூக்கத்தில் இருப்பது போல் உளறுகின்றனர். வேறு எதுவும் சாப்பிட்டார்களா என தெரியவில்லை. தொடர்ந்து அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இதனிடையே மயங்கி விழுந்த 5 பேரை சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.