tamilnadu

ஆற்றில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

குடவாசல்:
குடவாசல் தாலுகா கண்டரமாணிக்கம் கிராமத்தில் ஆற்றுக்கு குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா- தம்பி இருவரும் இறந்ததையடுத்து ஊரே சோகத்தில் மூழ்கியது.திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கண்டரமாணிக்கம் தெற்குத் தெருவில் வசிக்கும் செல்வம்- கவிதா தம்பதியின் மகன்  ஸ்ரீராம்(8), மகள் திவ்யா(11). பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் நண்பகல் 12.30 மணியளவில் அருகிலுள்ள திருமலைராஜன் ஆற்றில் குளிக்கச் சென்றனர். இதன் பின் வெகு நேரம் வரை ஆற்றுக்கு குளிக்கச் சென்ற குழந்தைகள் வராததால் அவர்களைச் தேடிச் சென்ற தாய் கவிதா, குழந்தைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள கோரப்புல்லில் சிக்கி உள்ளதை அறிந்து பொதுமக்கள் உதவியுடன் குழந்தைகளை மீட்டு குடவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சிறுவர்களை மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு குழந்தைகள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தார். பள்ளி விடுமுறை முதல் நாளிலேயே ஆற்றுக்குக் குளிக்கச் சென்ற குழந்தைகள் இறந்த அதிர்ச்சியில் சுற்றுவட்ட கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். 

;