tamilnadu

img

“என் ஏழு மாத குழந்தையையும் காவல்துறையினர் விட்டு வைக்கவில்லை” - சுரோ நியாஸி

மத்திய பிரதேசத்தின் குணாவில், காவல்துறை யின் தாக்குதலுக்கு உள்ளான தலித் விவசாயி ராஜ்குமார் ஆஹிர்வார், சம்பவ நாளன்று, காவல்துறை எல்லா எல்லைகளையும் கடந்துவிட்டதாக கூறுகிறார். தன் மனைவி, தாய் மற்றும் சகோதரருடன் கூடவே, தனது சிறு சிறு குழந்தைகளையும் கூட காவல்துறை  குறி வைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார். ராஜ்குமாரும், அவரது மனைவி சாவித்திரியும் தற்போது குணாவின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மயக்க நிலையில் மனைவி 

அவர் சொல்கிறார், “நாங்கள் வயலுக்கு வந்த அதிகாரிக ளிடம் மிகவும் மன்றாடினோம். ஆனால், அவர்கள் நாங்கள் சொன்னதைக் கேட்க தயாராக இல்லை. அவர்கள் தரக்குறைவாகப் பேசிவிட்டு, நீ இந்த இடத்தைவிட்டுப் போகப்போகிறாயா இல்லையா என்று மிரட்டினார்கள். அதன்பிறகு, என் குடும்பத்தைத் தாக்க ஆரம்பித்தார்கள்.” தனது மனைவி, தாய் மற்றும் சகோதரருடன் கூடவே, தனது ஏழுமாதக் குழந்தையும் காவல்துறை துன் புறுத்தலுக்கு ஆளானதாக, ராஜ்குமார் மருத்துவ மனையிலிருந்து தொலைபேசியில் சொன்னார். அவரது மனைவி சாவித்திரி, தற்போது மருத்துவமனையில் மயக்கநிலையில் உள்ளார். அவர் பேசும் நிலைமையில் இல்லை.

குத்தகைக்கு பெற்றோம்

விளைந்த பயிரை சேதத்திலிருந்து காக்க, நிர்வாகத்தி டம் இரண்டு மாதகால அவகாசம் மட்டுமே தாம் கேட்டதாக ராஜ்குமாரின் தாய் கீதா பாயி தெரிவித்தார். கப்பூ பார்தி என்பவரிடமிருந்து தாங்கள் இந்த நிலத்தை குத்தகைக்குப் பெற்றதாகவும், அவர் இந்த நிலத்தில் கடந்த 35 ஆண்டு களாக, விவசாயம் செய்துவந்ததாகவும் கீதாபாயி மேலும் கூறினார். “அவர் இத்தனை ஆண்டுகளாக இந்த நிலத்தில் விவசாயம் செய்துவரும் நிலையில், அவர் இந்த நிலத்திற்கு சொந்தக்காரர் அல்ல என்பதை நாங்கள் எப்படி ஒப்புக் கொள்வது? கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தில் விவசாயம் செய்துவருகிறோம்”, என்று கீதா பாயி தெரிவித்தார். இந்த நிலத்தில், ராஜ்குமார் ஆஹிர்கார், தனது மனைவி மற்றும் ஆறு குழந்தைகளுடன் வசிக்கிறார். இவர்களுடன், அவரது தாய் - தந்தை மற்றும் திருமண மாகாத சகோதரர் சிசுபாலும், உள்ளனர். ராஜ்குமாருக்கு, நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதிகாரிகள் மற்றும் காவல்துறையிடம் எந்தவிதமான முரட்டுத்தனமும் செய்யவில்லை என்று ராஜ்குமார் கூறினார்.

அந்த நிலத்தை நம்பியே

முழு குடும்பமும் இந்த நிலத்தையே நம்பியிருப்பதால், தாங்கள் காவல்துறை நடவடிக்கையை எதிர்த்ததாக கீதா பாயி குறிப்பிட்டார். இதன் காரணமாகவே, தனது மூத்த மகனும் மருமகளும், பூச்சிக்கொல்லிமருந்தைக் குடித்து உயிரைவிட முயற்சி செய்ததாக அவர் மேலும் சொன்னார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரல் ஆனபிறகு, முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் செளஹான், குணா மாவட்ட ஆட்சியர் விஸ்வநாதன் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி தருண்நாயக்கையும், அங்கிருந்து இடமாற்றம் செய்துள்ளார். இது நடந்த இரண்டாவது நாளே ஆறு காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 வைரல் ஆன தாக்குதல் வீடியோ

காவலர்கள் இந்தக் குடும்பத்தினர் மீது, கண்மூடித்த னமான தாக்குதல் நடத்தியிருப்பது, வீடியோ வைரல் ஆன பிறகு தெரியவந்துள்ளது. ராஜ்குமாரின் ஆறு குழந்தை களும், சம்பவம் நடக்கும்போது, அழுதவாறு கூச்சலிடு வதை வீடியோவில் கேட்க முடிகிறது. இந்த சம்பவம் நகரத்தின் கேண்ட் காவல்நிலைய சரகப்பகுதியில் நடந்தது. நகரத்தின் இணை மண்டல மாஜிஸ்டிரேட் தலைமையில் ஒரு குழு, ராஜ்குமார் விவசாயம் செய்துவந்த நிலத்தில், ஆக்கிரமிப்பை அகற்ற, அந்த இடத்திற்குச் சென்றது. காவல்துறை குழு, ஜேசிபி எந்திரம் மூலம், விளைந்த பயிரை அகற்ற ஆரம்பித்தது.

ராஜ்குமாரும் அவரது மனைவியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால், காவல்துறை அவர்களை அடித்து, பயிரை அகற்றும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டது. இதை தொடர்ந்து, கணவனும், மனைவியும், பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து, உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்தனர்.

கருணையிலா காவல்துறை

இந்த நிலம் ஆதர்ஷ் மஹாவித்யாலயாவுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலத்தை, முன்னாள் கவுன்சிலர் கப்பூ பார்தி ஆக்கிரமித்திருந்தார் என்றும் ராஜ்குமார் ஆஹிர்காரிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு, அவருக்கு குத்தகைக்கு விட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இங்குப் பயிர் செய்ய, ராஜ்குமார் கடன் வாங்கியி ருந்தார். குடும்பம் பிழைக்க, இந்த நிலத்தின் பயிர்தான் ஒரே ஆதாரமாக இருந்தது. ஆனால், நிர்வாகம் இந்தக் குடும்பத்தின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காமல், அவர்கள் மீது கருணையின்றி தாக்குதலும் நடத்தியது. அடிதடிக்கு பிறகும் அவர்களது வேண்டுகோள்களுக்கு யாருமே செவிமடுக்காததால், அவர்கள் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிட்டனர்.

பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தபிறகு இருவரும் கீழே விழுந்துவிட்டனர். ஆனால், அதற்கு பிறகும் அதிகாரிகள் அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லவில்லை. அவர்களின் குழந்தைகள்தான், அவர்களை எழுப்ப முயன்றனர். பின்னர் அதிகாரிகள், அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து ராஜ்குமாரின் குடும்பம், மிகைப்படுத்திக் கூறுகிறது என்று சம்பவ இடத்தில் இருந்த சிலர் கூறினர். ஆனால், ராஜ்குமாரின் சகோதரர் அங்கு வந்தபோது, அவரையும் காவலர்கள் அடித்தனர்.

காட்டாட்சி

மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரான கமல்நாத் இது குறித்து ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், ‘’சிவ்ராஜ் செளகான் அரசு மாநிலத்தை எங்கு எடுத்துச் செல்கிறது? என்ன மாதிரியான காட்டாட்சி இது? குணா கண்டோன்மெண்ட் பகுதியில் காவல்துறையால் ஒரு தலித் தம்பதி மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளனர்’’ என்று ட்வீட் வெளியிட்டுள்ளார். ‘’பாதிக்கப்பட்டவருடன் அந்த நிலம் தொடர்பாக ஏதாவது சர்ச்சை இருந்தால், அது குறித்து சட்டரீதியாக தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அந்த மனிதர், அவரது மனைவி மற்றும் அப்பாவி குழந்தைகள் மோசமாக தாக்கப்பட்டுள்ளனர். இது அவர்கள் ஏழை விவசாயிகள் மற்றும் தலித் என்பதாலா?’’ என்று அவர் மேலும் கேள்வியெழுப்பியிருந்தார்.

‘’இது போன்ற சம்பவங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இதனை பார்த்து கொண்டு காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்காது’’ என்று கமல்நாத் மேலும் குறிப்பிட்டார். இந்த சம்பவம் குறித்த காணொளியை ட்வீட் செய்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘’இம்மாதிரியான எண்ணங்கள் மற்றும் அநீதிக்கு எதிராக நாங்கள் போராடுவோம்’’ என்று கூறியுள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ‘’தலித்துகளின் நல்வாழ்வுக்கு, மேம்படுத்தலுக்கு தாங்கள் உதவுவதாக பாஜக கட்சியும், அதன் அரசுகளும் ஒருபுறம் பெருமையாக கூறிக் கொள்கின்றன. மற்றொரு பக்கம், முன்பு காங்கிரஸ் அரசு செய்தது போல பாஜகவும் தலித்துகளை வெளியேற்றி வருகிறது. அதனால் இவர்கள் இருவருக்கும் என்னதான் வித்தியாசம்? தலித்துகள் இது குறித்து சிந்திக்க வேண்டும்’’ என்று மாயாவதி கூறியுள்ளார்.

ரூ.2 லட்சம் கடன் வாங்கி

ஆதர்ஷ் பல்கலைக்கழகத்துக்கு சர்ச்சைக்குள்ளான நிலம் ஒதுக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்ற னர்.ஆனால், அந்த பகுதி கவுன்சிலர் நிலம் இது என்றும்,  அவர் பணம் பெற்றுக்கொண்டு ராஜ்குமார் அஹிர்வா ருக்கு இந்த நிலத்தை விவசாயத்துக்கு பயன்படுத்த வழங்கியதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த விளைநிலத்தில் பயிர் விளைவிக்க 2 லட்சம் ரூபாய் பணத்தை ராஜ்குமார் அஹிர்வார் கடன் வாங்கி இருந்ததாகவும், அவரின் குடும்பம் இந்த நிலத்தை சார்ந்த வருமானத்தை நம்பி இருப்பதாகவும் உள்ளூர் மக்கள் மேலும் கூறினர். ராஜ்குமார் மற்றும் அவர் மனைவி, பூச்சிக்கொல்லி மருந்தை அருந்திய பிறகு, போலீசார் அவர்களுக்கு உதவவில்லை. அவர்களுக்கு உதவி செய்ய அந்த இடத்துக்கு வந்த ராஜ்குமாரின் சகோதரரையும் காவலர்கள் அடித்துள்ளனர். ராஜ்குமார் மற்றும் அவர் மனைவி, மேலும் அந்த சம்பவம் நடந்தபோது அங்கிருந்த பலர் மீது காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வட்டாட்சியர் கூறுவதென்ன?

தாக்குதல் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்ற வட்டாட்சியர் நிர்மல் ரத்தோர், ராஜ்குமார் அஹிர்வாரின் குடும்பத்தார் போலீசாருடன் கடும் வாக்குவாதம் மற்றும் சண்டையில் ஈடுபட்டதாகவும், அதனால் போலீசார் சற்று கடினமாக நடந்து கொள்ள வேண்டியிருந்தது என தெரி வித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் நாள் முழுவதும் மிக அதிகமான முறைகள் இந்த தம்பதியர் தாக்கப்பட்ட காணொளி பகிரப்பட்டது. சிலர் முதல்வர் சிவ்ராஜ் செளகான் பதவி விலக வேண்டும் என்றும் கோரினர். விவசாயிகள் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்துவது இது முதல்முறையல்ல. இது போன்ற காணொளிகள் முன்பும் வெளிவந்துள்ளன. ஆனால் அப்போதெல்லாம் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.ஆனால், தற்போது இந்த காணொளி மிகவும் வைரலானதால், நடந்த சம்பவம் தொடர்பாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மக்கள் நம்புகின்றனர். 

கட்டுரையாளர் : பி.பி.சி. இந்தி செய்தியாளர்


 






 

;