உத்தரபிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக்கொன்ற விகாஸ் துபேயை காவலர்கள் என்கவுண்டரில் படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் ஆதரவுடன் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர் விகாஸ் துபே. இவரை பிடிக்க கடந்த 3ஆம் தேதி கான்பூரில் இருந்து போலீஸ் படை சென்றது. ஆனால் அவர்களை விகாஸ்துபே குழுவினர் சரமாரியாக சுட்டதில் 8 போலீசார் உயிரிழந்தனர். இதையடுத்து விகாஸ்துபேயை காவல்துறையினர் தேடி வந்தனர். 5 மாநிலங்களில் மாறி மாறி ஓடி தப்பித்து வந்த துபே கடைசியில் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் கோவிலில் வழிபடச் சென்ற போலீசார் சுற்றி வைத்து கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட விகாஸ்துபேயை கான்பூருக்கு கொண்டு வரும் வழியில் எதிர்பாராதவிதமாக போலீசார் வாகனம் ஒன்று தடம்புரண்டது. அப்போது விகாஸ் துபே தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி டாக்டர் சி.என்.அஸ்தான தனது ட்வீட்டர் பக்கத்தில் '' வாகனம் வந்த சாலை எந்தவித சேதங்களும் இன்றி சீராக இருக்கிறது. எனவே வாகனம் கவிழ்வதற்கான சூழலே இல்லை. சாய்ந்து கிடக்கும் வாகனத்தில் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டுக் கிடக்கின்றன. சுற்றிலும் திறந்த வெளியாக இருக்கிறது. விபத்தில் காரின் சக்கரங்கள் சில வினாடிகள் சுழன்றிருக்கும். அப்படி நடந்திருந்தால் தரைப்பகுதியில் இருக்கும் மண்ணில் சுவடுகள் பதிந்திருக்கும். அப்படி எதுவுமே இல்லை. ஒரு முட்டாள் கூட இதை விபத்து என்று கருதமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக பிரமுகரின் துண்டுதலில் மற்றொரு பாஜக பிரமுகரான சந்தோஷ் சுக்லா என்பவரை கொலை செய்திருப்பதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.