tamilnadu

img

சின்மயானந்த் மீது பாலியல் புகார் அளித்த சட்ட கல்லூரி மாணவி கைது

பாஜக மூத்த தலைவர் சின்மயானந்த் மீது பாலியல் புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவியை, பணம் பறித்தல் புகாரில் கைது போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்த் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு ஆசிரமங்களையும், கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர், சின்மயானந்த் தன்னை மிரட்டி பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் சின்மயானந்த் கடந்த 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் 2 நாட்கள் மட்டுமே சிறையில் இருந்தார். தற்போது அவர், லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து, ஜாமீன் கோரி, ஷாஜஹான்பூர் தலைமை ஜுடிசியல் நீதிமன்றத்தில் சின்மயானந்த் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து, செசன்ஸ் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டார்.

இந்நிலையில், பலியல் புகார் அளித்த சட்டக்கல்லூரி மாணவி, சின்மயானந்திடம் மிரட்டி பணம் பறித்தார் எனும் புகார் சிறப்பு விசாரணைக் குழுவிடம் வழங்கப்பட்டு இருந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் சட்டக்கல்லூரி மாணவியைக் கைது செய்ய சிறப்பு விசாரணைக் குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர். ஆனால், சட்டக்கல்லூரி மாணவி, முன்ஜாமீன் கோரி ஷாஜகான்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே அந்த சட்டக்கல்லூரி மாணவியை விசாரணைக்கு அழைத்த சிறப்பு விசாரணைக் குழுவினர் அவரிடம் நீண்டநேரம் விசாரணை நடத்தினார்கள். இந்த சூழலில், இன்று காலை சட்டக்கல்லூரி மாணவியை பணம் பறித்தல் புகாரில் சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்துள்ளனர்.