உத்திரபிரதேசத்தில் 10 ஆண்டுகளாக 50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த நீர் பாசனத்துறை பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவின் யோகி ஆதித்யனாத் அரசு ஆட்சி செய்யும் உத்திரபிரதேசம் மாநிலத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட சுமார் 50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக உத்திரபிரதேச நீர்ப்பாசனத் துறையின் இளநிலை பொறியாளரை கைது செய்துள்ளதாக மத்திய புலனாய்வு முகமை இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.
வன்கொடுமை செய்வதை வீடியே எடுத்து அதை இணையத்தில் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
சித்ரகூட், பண்டா மற்றும் ஹமீர்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை நடந்ததுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் பண்டாவிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் குடியிருப்பு மற்றும் பிற இடங்களில் சோதனையின்போது, சிபிஐ எட்டு கைபேசி, சுமார் 8 லட்சம் ரொக்கம், ஒரு மடிக்கணினி ஆகியவற்றை மீட்டதுள்ளது.