tamilnadu

img

ரபேல் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் பதவி நீக்கம்

ரபேல் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் யோகி ஆதித்தயநாத் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. பாஜகவின் கூட்டணி கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் வாதி கட்சித் தலைவருக்கும் உத்தரபிரதேச அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டது. சுகல்தேவ் பாரதிய சமாஜ்வாதி கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பர் யோகி அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக பல்வேறு புகார்களை எதிர்க்கட்சிகள் கூறிவருகிறது. இதுகுறித்து, சுகல்தேவ் பாரதிய சமாஜ்வாதி கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பரும், மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில், லோக்சபா தேர்தல் முடிவடைந்ததும், உத்தரபிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை பதவியிலிருந்து நீக்கும்படி, ஆளுநர் ராம் நாயக்குக்கு யோகி ஆதித்யநாத் கடிதம் அனுப்பினர். அதை ஏற்று ஆளுநர் ராம்நாயக் அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை, பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.