tamilnadu

img

உ.பி பாலியல் குற்றச்சாட்டில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் குற்றச்சாட்டில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

உத்தர பிரதேசத்தில் பதோஹி தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ரவீந்திரநாத் திரிபாதி. இந்நிலையல் எம்எல்ஏ ரவிந்திர நாத் திரிபாதி மற்றும் அவரது குடும்பத்தினர்  பேர் மீது 40 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரப் புகார் அளித்துள்ளார்.  2017-ல் உ.பி. தேர்தலுக்கு முன்பாக விடுதி அறை ஒன்றில் தன்னை எம்.எல்.ஏ.வும், சந்திரபூஷன் திரிபாதி, தீபக் திவாரி, நிதிஷ் திவாரி, பிரகாஷ் திவாரி ஆகியோர் பாலியல் வன்கொடுமைச் செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த தன்னை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினர் என்றும்  புகாரில் தெரிவித்துள்ளார். 
பாதிக்கப்பட்ட பெண் முதலில் எம்.எல்.ஏ மருமகன் சந்தீப் திவாரி மீதுதான் புகார் அளித்திருந்தார், பிறகு எம்.எல்.ஏ. திரிபாதி பெயரையும் புகாரில் சேர்த்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர். புகாரில் கூறப்பட்டுள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று போலீஸ் எஸ்.பி. ராம் பதன் சிங் தெரிவித்தார்.