tamilnadu

img

யோகா செய்தால் கொரோனா வைரஸை தடுக்கலாமாம் - யோகி ஆத்தியநாத் கண்டு பிடிப்பு

யோகா செய்தால் கொரோனாவை  தடுக்கலாம்  என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆத்திய நாத் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கருத்தை தெரிவித்துள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது. சீனா மட்டுமின்றி  உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தற்போது சீனாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்தாலும் சீனாவிற்கு வெளியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தென்கொரியாவில் மட்டும் 22 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 4000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
இந்த நிலையில் யோகா மூலம் கொரோனா வைரசை தடுக்கலாம் என்று உத்தரபிரதேச  பாஜக முதல்வர்  யோகி ஆதித்யநாத்  சர்ச்சையை கிளப்பி உள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் சர்வதேச யோகா திருவிழாவை தொடங்கி வைத்து அவர் இது தொடர்பாக பேசியதாவது:-
இந்திய பாரம்பரியத்தை நாம் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். யோகா மூலம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். உலகம் முழுவதும் உடல் மற்றும் மன நோய்க்கு எதிரான போர் நடக்கிறது.  வழக்கமாக யோகா செய்தால் கொரோனா வைரஸ் போன்றவற்றை தடுக்கலாம். யோகா மூலம் நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் கொரோனா போன்ற நோய்க்கு அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். 
உலகமே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் உ.பி முதல்வர் ஆத்திய நாத்தின் அறிவியலுக்கு புறம்பான கருத்து விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உ ள்ளது.