tamilnadu

img

உத்தரப்பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் ஆக்ராவிலிருந்து லக்னோ செல்லும் நெடுஞ்சாலையில் லாரி ஒன்றின் மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பலியாகினர். சுமார் 30க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.


இன்று காலை உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் ஆக்ராவிலிருந்து லக்னோ செல்லும் நெடுஞ்சாலையில் மையின்புரி என்ற இடத்தில் பேருந்து ஒன்று முன் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 30க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.


படுகாயம் அடைந்தவர்கள் எட்வா நகரத்தில் உள்ள சய்ஃபாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


;