உதகை, செப் 5 - நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஏடிசி சுதந்திரத்தி டல் அருகில் பி1 நகர போலீசார் வாகன தணிக்கையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் ஆளும் அதி முக பிரமுகர் ஒருவர் சீட் பெல்ட் அணியாமல் வந்துள்ளார். இதனைக்கண்ட காவலர் அந்த வாகனத்தை நிறுத்தக் கூறினார்.
அப்போது காரில் இருந்து இறங்கிய அதிமுக பிரமுகர், ஆத்திரத்துடன் அந்த காவலரிடம் சென்று பைன் போடுவியா, போட்டு பார் என்று மிரட்டும் தோணியில் கூறி விட்டு காரில் ஏறியுள்ளார். இதையடுத்து, அந்த வாகனத்தை காவலர்கள் புகைப்ப டம் எடுக்கும்போது, அந்த காரை ஓட்டிவந்த நபர் காவ லர்களை நோக்கி ஆபாச செய்கையை காட்டியபடி அங்கி ருந்து கிளம்பி சென்றார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அதி முக பிரமுகரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்ததுடன், பொதுமக்களிடையே பெரும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.