tamilnadu

img

தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க மறுக்கும் ஜெயின் இரிகேசன் நிறுவனம் சிஐடியு உள்ளிருப்புப் போராட்டம்

உடுமலை, ஜூலை 11 -   உடுமலை ஜெயின் இரிகேசன் நிறு வனம் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க மறுப்பதை கண்டித்து சனி யன்று சிஐடியு தலைமையில் தொழி லாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, எலையமுத்தூர் பகுதியில் செயல்படும் ஜெயின் இரிகேசன் சிஸ் டம்ஸ் லிட் என்ற விவசாய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டதொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இத்தொழிலா ளர்களுக்கு கடந்த மூன்று மாதங்க ளாக வேலை மற்றும் சம்பளம் வழங் காமல் இருந்து வருகிறது.

இதனால் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பட்டினி கொடுமைக்கு உள்ளாகி வருகின்றனர்.   இதுதொடர்பாக அரசு நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படா ததைக் கண்டித்து சனியன்று சிஐடியு தொழிற்சங்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத் தில் சிஐடியு மாநில துணைச் செய லாளர் எம்.சந்திரன், மாவட்ட செயலா ளர் ரங்கராஜ், மாவட்ட துணைச் செய லாளர் எஸ்.ஜெகதீசன், கட்டுமான சங்க நிர்வாகிகள் குமார், கி.கனக ராஜ், ஜெயின் மற்றும் கிருஷ்ண மூர்த்தி, காஜாமைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.