உடுமலை, ஜூலை 28- ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிக்கப் படுவதால், உடுமலை நகராட்சி அலுவலகத்திலுள்ள ஆதார் சேவை மையத்தை பொதுமக்கள் முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை நகராட்சி அலுவல கத்தில் நகராட்சிக்குட்பட்ட பகுதி யில் உள்ள பொதுமக்களுக்காக ஆதார் சேவை மையம் செயல்படு கிறது. இம்மையத்தில் புதிதாக ஆதார் எடுத்தல், திருத்தங்கள் மேற் கொள்ளுதல் ஆகிய பணிகளுக்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். தினந் தோறும் 25 பேருக்கு மட்டுமே ஆதார் எடுக்கப்படும் என டோக்கன் வழங் கப்படுவதோடு, அதையும் இடைத் தரகர்கள் மூலம் விநியோகம் செய்து முறைகேடாக பணம் பெற்று வரு கின்றனர். மேலும் ஒன்றிய பகுதி களில் உள்ள சில நிறுவனங்கள் பெயரில் ஆதார் எடுத்து தருவதாக மோசடியில் ஈடுபட்டு வருகின் றனர். இந்நிலையில், நகராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆதார் சேவை மையத்தில் காத் திருந்த நிலையில், தனியார் நூற் பாலையில் இருந்து வந்த 15க்கும் மேற்பட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கான டோக்கன் ஒரு நபரிடம் வழங்கப் பட்டுள்ளது. இதையடுத்து காத்தி ருந்தவர்களிடம் சர்வர் பழுது, பிரிண்டர் செயல்படவில்லை என காரணங்களை கூறி அடுத்த நாள் வருமாறு ஊழியர்கள் தெரிவித் தனர். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் ஆதார் சேவை மையத்தை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறு கையில், இடைத்தரகர்கள் மூலம் வந்தால் மட்டுமே ஆதார் குறித்த பணி நடைபெறுகிறது. இல்லை யென்றால் பல்வேறு காரணங் களை கூறி அலைக்கழிக்கப் படுவதாகவும்், மேலும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ஒட்டு மொத்தமாக ஆதார் எடுக்கப் படுவதாகவும் குற்றம்சாட்டினர். இதனையடுத்து நகராட்சி ஊழியர்கள் சமதானப் பேச்சு வார்த்தை நடத்தி மொத்தமாக வந்த தனியார் மில் ஊழியர்களை அனுப்பி வைத்து, நகராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு ஆதார் எடுக்கும் பணி நடை பெற்றது. இதனால் நகராட்சி அலு வலகத்தில் பரபரப்பு நிலவியது.