மதுரை:
இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்வியில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கினால் என்ன? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வியெழுப்பியுள்ளது.
இளையான்குடியைச் சேர்ந்த குறளரசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பணியில் உள்ள இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில்ஒதுக்கீடு மறுத்து தமிழக சுகாதாரத் துறை 2018-ஆம்ஆண்டு முதல் அரசாணை வெளியிட்டது. அதை ரத்துசெய்து பணியில் உள்ள படை வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த தனி நீதிபதி தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து, பணியில் உள்ள படைவீரர்களின் வாரிசுகள் இட ஒதுக்கீடு பிரிவின்கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ்சேர்க்கையில் அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்இதை எதிர்த்து தமிழக தலைமைச் செயலாளர் மேல்முறையீடு செய்தார்.இந்த மனு நீதிபதிகளின் கிருபாகரன், புகழேந்தி அமர்வு சனிக்கிழமை விசாரித்தது. அரசுத் தரப்பில் இதுசம்பந்தமாக ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆண்டுதோறும் மருத்துவப் படிப்பிற்காக இடங்கள் அதிகரிக்கப்படுகின்றன. 2015-ஆம் ஆண்டு முதல் முதல்2020-ஆம் ஆண்டு வரை எத்தனை இடங்கள் அதிகரிக்கபட்டுள்ளது? இதில்முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகள் எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? எனக் கேள்வி எழுப்பினர். பின்னர் நவம்பர் 19ஆம் தேதி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.