tamilnadu

img

அரசு நில ஆக்கிரமிப்பு வழக்கு: நீதிபதிகள் சரமாரி கேள்வி

சென்னை,பிப்.8- ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்கள் மற்றும் புறம்  போக்கு நிலங்களை மீட்பதற்காக தனி பிரிவை ஏன் ஏற்ப டுத்தக்கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  கோவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆக்கிர மிப்பு நிலம் தொடர்பான வழக்கை அரசு வழக்கறிஞர் முறை யாக நடத்தவில்லை என்று சுப்பையா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும்  பொங்கியப்பன் அமர்வு, அரசு வழக்கறிஞர், ஆக்கிரமிப்பா ளருடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளதாக கூறி, கோவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள  வழக்கில் தீர்ப்பு வழங்க தடை விதித்தது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  செயலாளர், வருவாய் துறை செயலாளர், வணிகவரி மற்றும்  பதிவுத் துறை செயலாளரை தாமாக முன்வந்து எதிர்மனு தாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர்

மேலும், தமிழ்நாடு முழுவதும், மாவட்ட வாரியாக எத்தனை ஏக்கர் அரசு மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன, அதில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, இந்த நிலங்களை மீட்க தொடரப்பட்ட வழக்குகள் எத்தனை,  அதில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசுத்தரப்பு முறையாக நடத்தாத வழக்குகள் எத்தனை,  ஒருதலைபட்சமான தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகள் எத்தனை, வழக்குகளை முறையாக நடத்தாத வழக்கறி ஞர்கள் மீதான நடவடிக்கை என்ன என்றும் நீதிபதிகள் சரமாரியாக  கேள்வி எழுப்பினர். அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்க, அந்த நில விவரங்களை அனைத்து  மாவட்ட பதிவுத்துறைக்கு ஏன் தரக் கூடாது என்றும் நீதிபதி கள் வினவினர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து, அவற்றை மீட்பதற்கு தனி பிரிவை  ஏன் துவங்கக் கூடாது என்பது குறித்தும் பதிலளிக்க அரசுக்கு  நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசா ரணை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.