மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
தூத்துக்குடி, அக்.29- மாணவி சோபியாவிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கில் காவல்துறை அதிகாரிகளை விடுவிக்க கோரிய மனுவை மாநில மனித உரிமை ஆணையம் தள்ளுபடி செய்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி குற்றாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற அப்போ தைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். அப்போது அதே விமானத்தில் பயணம் செய்த மாணவி சோபியா, தமிழிசையைப் பார்த்ததும், பாஜக ஆட்சி ஒழிக என்று முழக்கம் எழுப்பினார். கோபமடைந்த தமிழிசை அந்த மாணவியுடன் விமான நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், விமானம் தரையிறங்கி யதும் முழக்கமிட்ட இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். இதையடுத்து சோபியா கைது செய்யப் பட்டார். பின்னர், ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்.
இந்நிலையில் மாணவி சோபியாவிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவரது தந்தை டாக்டர் சாமி மனு தாக்கல் செய்தார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணி ப்பாளர் பிரகாஷ், ஆய்வாளர்கள் திருமலை பாஸ்கர், அன்னத்தாய், உதவி ஆய்வா ளர்கள் லதா, நம்பிராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில மனித உரிமை ஆணையத்தை கேட்டுக்கொண்டுள் ளார். இந்த வழக்கில் எதிர் மனுதாரர்கள் பொன்ராம், பிரகாஷ், பாஸ்கர், நம்பிராஜன் ஆகியோர் தங்களை வழக்கி லிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு செவ்வாய்க்கிழமை (அக்.29) விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகை யில் நடைபெற்ற விசாரணையில் மாநில மனித உரிமை ஆணையம் மேற்கண்ட வர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த விசார ணை நவம்பர்15 ஆம் தேதி திருநெல்வேலி யில் நடைபெற உள்ளது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் சுப.இராமச்சந்திரன், பெ.சந்தனசேகர் ஆகியோர் ஆஜராகினர்.