tamilnadu

img

சபரிமலையை நிர்வகிக்க தனிச்சட்டம் தேவை

நான்கு வாரத்தில் சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி, நவ.20- சபரிமலையை நிர்வகிக்க தனி சட்டம் கொண்டுவர உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், புதிய சட்டத்தின் வரைவை நான்கு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கீழ் உள்ள அனைத்து கோயில்களையும் நிர்வகிக்க தனி போர்டு உருவாக்க ஏற்கனவே கேரள அரசு முடிவெடுத் திருந்தது. அதற்கு எதிராக பந்தளம் அரச குடும்பம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை புதனன்று உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சபரி மலையை தனித்துவமாக கருதுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கீழ் உள்ள அனைத்து கோயில்களையும் நிர்வகிக்க தனியாக போர்டு அமைப்பதற்கான வரைவு மசோதாவை கேரள அரசு சமர்ப்பித்தது.

மூன்றில் ஒரு பங்கு பெண்கள்

போர்டுக்கான வரைவு மசோதாவில், மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது குறித்து நீதி மன்றம் சந்தேகம் எழுப்பியது. சபரிமலை தொடர்பான 5 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்புக்கு எதிராக எதற்கு பெண் உறுப்பினர்களை போர்டில் இணைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியது. சபரிமலைக்கு மட்டுமேயான ஒரு சட்டம் கொண்டு வருவதில் என்ன தடை உள்ளது எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கை கையாள்வதன் முக்கிய  நோக்கம் ‘தனிச்சட்டம்’ குறித்துதான் என நீதிமன்றம் தெரிவித்தது. இதற்காக மூன்று மாத காலஅவகாசம் வழங்குவ தாகவும், மசோதாவின் நகல் ஒரு மாதத்துக் குள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு வழக்கின் விசாரணையை ஜனவரி மூன்றாவது வாரத்துக்கு ஒத்தி வைத்தது.