பெண்களை ஏமாற்றி, அந்தரங்கப் படங்களை வெளியிட்டு பணம் பறித்த சமூக விரோதிகளை கைது செய்க!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை,ஏப்.26- நாகர்கோவிலில் பெண்களை ஏமாற்றி அந்தரங்கப் படங்களை சமூக வலைத்தளங் களில் வெளியிட்டு பணம் பறித்த சமூக விரோதி கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய புலனாய்வு விசார ணைக்கு (சிபிஐ) உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவி லில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலமாக நட்பு ஏற்படுத்தி, ஏராளமான பெண்களை காதலிப்பதாகக் கூறி பாலியல் உறவு வைத்து, அவற்றை புகைப் படம், வீடியோ எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததோடு குற்றம்சாட்டப்பட்ட காசி, பணம் தர மறுத்த பெண்களின் அந்தரங்க படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்து முக நூலில் பதிவேற்றியிருக்கிறான். இந்தக் கொடூ ரச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேத னையையும் அளிக்கிறது.
ஏற்கனவே, அருப்புக்கோட்டை மாணவி கள் பாலியல் வற்புறுத்தல் வழக்கு, பொள் ளாச்சியில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்கு போன்றவைகளைத் தொடர்ந்து நாகர்கோவில் சம்பவம் ஒட்டுமொத்த தமி ழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள ளது.
சென்னை பெண் புகார்
பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் அடக்கம் என்று கூறப்படுகிறது. ஆனால் அச்சத்தின் காரணமாக ஒருவரும் இதுவரை புகார் கொடுத்ததாக தெரிய வில்லை. ஆனால், சென்னையை சேர்ந்த ஒரு பெண், ஏழு இலட்ச ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை இழந்து, தனது அந்தரங்கப் படங்கள் சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டதை பார்த்து அதிர்ந்து, நடந்த சம்பவங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பியுள் ளார்.
அதன்படி, கோட்டார் காவல்துறை 9 பிரிவு களில் வழக்கு பதிவு செய்து, காசியின் செல்போன் மற்றும் ஆவணங்களை கைப் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். தற்பொழுது காசியும் அவனது இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுக்கடுக்காக இத்தகைய பாலியல் கொடுமைகள் இணையதள புகார்கள் வந்தபோதிலும் காவல்துறை உரிய நட வடிக்கை எடுக்காததன் காரணமாகவே இச்சம்பவங்கள் தொடர்கதையாகி வரு கின்றன. இவன் மீது ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தியதாக கோட்டார் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளார். அப்போதே சட்டப்படி யாக முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் அடுத்தடுத்து குற்றங்கள் நடக்காமல் தடுத்திருக்கக் முடியும் என சுட்டிக்காட்ட விரும்பு கிறோம்.
தண்டனை வழங்காததால் சமூகவிரோதிகள் துணிச்சல்
2019 ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொள்ளாச்சி சம்பவத்திலும், அதற்கு முன்னர் நடைபெற்ற அருப்புக்கோட்டை சம்பவத்திலும் குற்றவாளிகளுக்கு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை. இத்தகைய போக்கு காவல்துறை மற்றும் நீதிமன்றங்களின் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய் வது மட்டுமின்றி, சமூக விரோதிகள் எதை யும் செய்யலாம் என்ற துணிச்சலோடு அக்கிர மங்களைத் தொடர்வதற்கு வழிவகுக்கின்றன என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்த மாக தெரிவிக்க விரும்புகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் தமிழகத்தினு டைய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வர்கள் மட்டுமல்ல, இதர மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் என்ற சூழலில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் காவல்துறையினர் மட்டும் விசாரித்தால் திறம்பட வழக்கை நடத்த முடியாது. உள்ளூர் நிர்ப்பந்தங்களும் இருக்கும் என்பதால் மத்திய புலனாய்வுத் துறையின் கீழ் விசாரணை நடத்தப்படுவதே பொருத்தமாக இருக்கும். எனவே, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.
கண்டனக்குரல் எழுப்புக!
மேலும், இக்கொடுமையை புரிந்துள்ள காசி மற்றும் அவனது நண்பர்கள், அவர் களுக்கு துணைபுரிந்த அனைவரையும் தாம தமின்றி கைது செய்ய வேண்டும்.
தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை இன்றைய சமூகச் சூழலில் வெளியே சொல்வ தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தயக்கம் இருக்கும் என்பதால் அவர்களுக்கு நம்பிக்கை யூட்டி காவல்துறையை அணுக வைப்பதற் கான முயற்சிகளை தமிழக அரசு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்துவது ஆணாதிக்கச் சமூகத்தில் இயல்பாக உள்ள பின்னணியில் காவல்துறை யோ, ஊடகங்களோ, சமூகமோ பெண்களின் மீது குற்றம் சுமத்துவதை தவிர்க்க வேண்டு மெனவும், பெண்களை ஏமாற்றி இத்தகைய கொடூரச் செயல்களை புரிந்து வரும் சமூக விரோதிகளை எதிர்த்து கண்டனக்குரல் எழுப்ப முன்வர வேண்டுமெனவும் பொது மக் களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
விரைவான விசாரணை தேவை
குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கக் கூடிய விதத்தில் துரித விசாரணை அமைய வேண்டும். இனிமேல் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழாவண்ணம் புகார்கள் வந்த வுடனேயே அதன்மீது விரைவாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தகுந்த தண்டனையை கிடைக்கச் செய்வதன் மூலமே இப்படிப்பட்ட குற்றங்களை தடுக்க முடியும்.
எத்தகைய அரசியல் நிர்ப்பந்தத்திற்கும் இரையாகாமல் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மாதர் சங்கம் கண்டனம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கை போலவே நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற நபர் பல சிறுமிகளையும், பெண்களையும் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தும், பல லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய் தும் அரங்கேற்றியுள்ள கொடுமைகள் அதிர்ச்சி யை ஏற்படுத்துகிறது என்று வன்மையாக கண்டித்துள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண் டினா, மாநில பொதுச் செயலளார் பி.சுகந்தி ஆகியோர், இவ்வழக்கில் தமிழக பெண்கள் ஆணையம் உடனே தலையிட வேண்டும்; இவ்வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து அனைத்து உண்மைகளையும் வெளிக் கொண்டு வந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.