புதுதில்லி, செப்.1- மத்திய பாஜக அரசால் திருத்தப் பட்ட மோட்டார் வாகனச் சட்டம் நாடு முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் போக்குவரத்து விதிகளை மீறு வோருக்கு விதிக்கப்படும் அபராதம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட பின்னர் கடந்த மாதம் 9 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்பு தல் அளித்தார். இந்தப் புதியச் சட்டத் தின்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு 10 ஆயிரம் ரூபாயும், அதிவிரைவாகவும், பொறுப்பற்ற முறையிலும் வாகனம் ஓட்டுப வர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டி னால் 5 ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்.
இதேபோல் ஹெல்மட் அணியா மல், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் போது செல்போனில் பேசினால் 5 ஆயிரம் ரூபாயும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்க ளுக்கு 20 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். இதேபோல் சிறு வர்கள் இருசக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனங்களை ஓட்டினால் வாகனப்பதிவு ரத்து செய்யப்படுவ தோடு, அவர்களின் பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால ஊர்திகளுக்கு வழிவிடாமல் இருந்தால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது. இந்த அபராதத் தொகை பொதுமக்களுக்கு மட்டுமின்றி அதி காரிகளுக்கும், காவல்துறையின ருக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.