tamilnadu

img

காதுவலிக்கு தவறான சிகிச்சை: ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

காதுவலிக்கு தவறான சிகிச்சை அளித்தால் கேட்கும் திறன் பறிபோனது குறித்த வழக்கில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்த புஷ்பவள்ளி என்பவர் தனது காது வலிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். காது வலிக்காக சென்ற புஷ்பவள்ளிக்கு இரண்டு செவிகளிலும் அறுவை சிகிச்சை செய்ததால் கேட்கும் திறனை முற்றிலும் இழந்தார். இதுகுறித்த  மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். 
 

;