tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டம்

சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலய நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து வழக்கறிஞர் நீதிமன்றம் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வி.கே.தஹில் ரமணி நியமிக்கப்பட்டார். நாட்டில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் நீதிபதிகளில் இவரும் ஒருவர் என்பது ஆவார். இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணியை, மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக மாற்றி 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற கொலிஜீயம் குழு உத்தரவிட்டது.  நிர்வாகக் காரணங்களுக்காக தலைமை நீதிபதி தஹில் ரமணி மாற்றப்படுவதாக கொலிஜீயம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு, கொலிஜீயத்திற்கு தஹில் ரமணி கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க கொலிஜீயம் மறுத்துவிட்டது.

இந்த சூழலில் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யும் முடிவை எதிர்த்து, ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.  ஆனால் தஹில் ரமணி ராஜினாமா கடிதம் அளித்ததை அடுத்து, தலைமை நீதிபதி அமர்வில் எந்தவித வழக்குகளும் இன்று விசாரிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்குகள் அனைத்தும், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அமர்விற்கு மாற்றப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
இந்நிலையில் தஹில் ரமணி மேகாலய நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதைக்கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று வழக்கறிஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 8 பேருக்கு தண்டனை வழங்கியதால் நீதிபதி தஹில் ரமணி பழிவாங்கப்படுகிறார் என்று வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.