சென்னை, மார்ச் 20- நீதிமன்றங்களில் பல லட்சம் வழக்கு கள் தேங்கிக்கிடக்கின்றன. அவற்றை விசா ரித்து முடிக்க நீதிமன்றத்தின் வேலை நாட்க ளையும், பணி நேரத்தையும் அதிகரிக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர். சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை மானியத்தின் மீது பேரவையில் வெள்ளியன்று (மார்ச் 20) விவாதம் நடைபெற்றது. அதன் சுருக்கம் வருமாறு: தாயகம் கவி (எ)சிவக்குமார் (திமுக): தமிழக நீதிமன்றங்களில் 14 லட்சத்து 10 ஆயிரத்து 406 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறு முகசாமி ஆணையம், தூத்துக்குடி துப் பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க அமைக்கப் பட்ட நீதிபதி அருணாஜெகதீசன் ஆணை யம் உள்ளிட்ட ஆணையங்களின் தற்போதைய நிலை என்ன?
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனி சாமி: ஆறுமுகசாமி ஆணையம் தொடர் பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள் ளது. அதுகுறித்து விவாதிக்கக் கூடாது. தாயகம்கவி: இளம் வழக்கறிஞர்க ளுக்கு பயிற்சி உதவித்தொகை வழங்க வேண்டும், வழக்கறிஞர் சேமநலநிதியை 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். சிறைக்கைதிகளை சந்திக்கச்செல்வோர் நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவதை கைவிட வேண்டும். எஸ்.செம்மலை (அதிமுக): மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வில் ஒரு வழக்க றிஞர் கூட தேர்ச்சி பெறவில்லை. கல்வித்த ரம் குறைந்துவிட்டதா? உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்: உயர்நீதிமன்றம் அந்தத் தேர்வை நடத்துகிறது. 32 நீதிபதிக ளுக்கான அந்த தேர்வு மீண்டும் நடை பெற உள்ளது. உச்சநீதிமன்றம், தனது கிளையை வேறு எங்கும் அமைப்பதை ஏற்கவில்லை. இருப்பினும், தென்மாநி லங்களுக்கான கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்பது நமது கோரிக்கையாக உள்ளது என்றார்.