tamilnadu

img

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மேலும் ஒரு மாணவர் கைது

சென்னை, பிப். 25- நீட் தேர்வு முறைகேடு தொடர்  பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் சென் னையைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவர் பிடிபட்டுள்ளார்.. கடந்த ஆண்டு நடைபெற்ற நீட்தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதி டாக்டர் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் பற்றிய தகவல் சமீபத்தில் தெரியவந்தது. தேனி மருத்துவக் கல்லூரியில் ஆள்மாறாட்டம் மூலமாக தேர்வு  எழுதிய மாணவர்கள் பற்றிய  விவரங்கள் முதலில் வெளிச் சத்துக்கு வந்தது. இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி  போலீசார் விசாரணை நடத்தி  நீட்தேர்வு முறைகேடு தொடர் பாக சென்னையில் படித்து வந்த  மாணவர்கள் மற்றும் பெற்றோர் களையும் கைது செய்தனர். தமிழ கத்தைச் சேர்ந்த மாணவ- மாண விகள் நீட்தேர்வு முறை கேட்டுக்காக வெளி மாநிலங் களை தேர்வு செய்து ஆள்மாறாட்  டம் மூலம் தேர்வு எழுதி மோசடி யாக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருந்தனர்.

ஆள்மாறாட்டம் செய்து தேர்வு  எழுதியவர்களின் புகைப்படங் களை சி.பி.சி. ஐ.டி போலீசார் கடந்த வாரம் வெளியிட்டனர். 2  மாணவிகள் உள்பட 11 பேரை தேடி கண்டுபிடிக்கும் பணி தீவிரப்  படுத்தப்பட்டுள்ளது. நீட்தேர்வு முறைகேடு தொடர்பாக இது வரை 20 பேர் வரையில் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு மாணவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். கிருஷ்ண கிரியை சேர்ந்த அந்த மாணவர் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் ஆள்மாறாட்டம் மூலமா கவே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருவது தெரிய வந்துள்ளது.

நீட் முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணை யில்தான் புதிதாக மேலும் ஒரு மாணவர் பிடிபட்டுள்ளார். நீட் தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதுவதற்காக மாணவர்களின் பெற்றோர் ரூ.20 லட்சம் வரையில்  பணத்தை வாரி இறைத்துள்ள னர். தற்போது கைது செய்யப் பட்டுள்ள கிருஷ்ணகிரி மாணவ ரும் ஆள்மாறாட்டம் மூலமாக தனக்கு பதில் தேர்வு எழுதிய மாணவருக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுத்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.