tamilnadu

img

வாக்கு எண்ணிக்கை: கேமிரா பதிவில் திருத்தம் செய்ய கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,ஜன.3- வாக்கு எண்ணிக்கை மைய கண்காணிப்பு கேமிரா பதிவுகளில் திருத்தம் செய்ய கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தாமதப் படுத்தப்படுவதாக தி.மு.க. தொடர்ந்த வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் விதிகளுக்கு உட்பட்டுத்தான் தேர்தல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மாநில தேர்தல் ஆணையத்தின் விளக்கத்திற்கு சாட்சி யாக வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். கண்காணிப்பு நடைமுறைகள் முடியாததால் சி.சி.டி.வி. பதிவுகளை தற்போது தாக்கல் செய்ய முடியாது என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கண்காணிப்பு கேமிரா பதிவு களில் திருத்தம் செய்ய கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார். தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று விசாரணை 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

;