tamilnadu

img

தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு

2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்:
 

புதுதில்லி,டிச.4- உள்ளாட்சித் தேர்தலில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப் படும் என்ற, தமிழ்நாடு மாநில தேர் தல் ஆணைய அறிவிப்பாணை க்குத் தடை விதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் திமுக புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. பழங்குடியின பெண்களுக் கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட வைத் தொடர்பாக, உச்சநீதிமன் றத்தில் திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. வார்டு மறுவரை யறை முடியும் வரை தேர்தல் நடத் தக்கூடாது என உத்தரவிடக்கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மனு மீதான விசாரணை வியா ழனன்று நடைபெறுகிறது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, இரண்டு கட்டங்க ளாக தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பாணைக்குத் தடை விதிக் கக் கோரி, உச்சநீதிமன்றத்தில், திமுக சார்பில் புதனன்று புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள் ளது.