tamilnadu

img

கிறிஸ்தவ கல்லூரி குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெளியிட்ட கருத்தை நீக்க வேண்டும்

எஸ்.வாலண்டினா,
மாநிலத் தலைவர்
பி.சுகந்தி, 
மாநில பொதுச் செயலாளர்

சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மாணவிகள் சிலர் தங்களை 2 பேராசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப் பட்டு  ஒரு பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார் மற்றொரு பேராசிரியர் தனக்கு கல்லூரி நிர்வா கம் அனுப்பிய பணி நீக்கம் செய்வதற்கான விளக்கம் கோரும் நோட்டீசை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்து பேராசிரியரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ். வைத்தியநாதன் கீழ்க்கண்ட கருத்துக் களை தீர்ப்பில் எழுதியுள்ளார். - ஆண் பெண் இருபாலரும் பயிலும் கிறிஸ்தவ மிஷனரி கல்லூரி நிறுவனங்களில் படிப்பது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்ற கருத்தை அவர்கள் பெற்றோர்கள் மத்தி யில் நிலவுவதாகவும் கட்டாய மதமாற்றத்தில் சில கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் ஈடுபடுவதா கவும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளது என்றும் தரமான கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவ மிஷனரி நடத்தும் கல்வி நிறுவனங்கள் நன்னெ றியை போதிக்கின்றனவா என்பது மில்லியன் டாலர் கேள்வி என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் துஷ்பிர யோகம் செய்யப்படாமல் இருக்கவும் அதிலி ருந்து அப்பாவி ஆண் இனத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதி கூறியிருக்கிறார். இந்த கருத்துக்களின் அடிப்படையில் தனது தீர்ப்பின் நகலை மத்திய அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டு இருக்கிறார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ் மாநில குழு இந்த தீர்ப்பின் மீதான கேள்விகளையும் கருத்துக்களையும் கீழ்க்கண்ட வகையில் முன்வைக்கிறது.

  • வழக்கில் எழுப்பப்படாத, வழக்கிற்கு தொடர்பு இல்லாத அடிப்படை ஆதாரமற்ற கருத்துக்களை முன்வைத்து சமுதாயத்தின் ஒரு தரப்பினர் மீது குற்றம் சாட்டுவது அரசியல் சட்டப்படி நீதிபரிபாலனமா?
  • கிறிஸ்தவ மிஷனரி கல்வி நிறுவனங்களை மட்டுமே இந்தக் குற்றச்சாட்டு வளையத்திற்குள் கொண்டு வருவது நியாயம்தானா? கிறிஸ்தவ மிஷனரி நடத்தாத எத்தனையோ பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நிகழும் பெண்கள் மீதான குரூரமான தாக்குதல்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை.
  • நன்நெறி போதித்தல் என்று வரும்போது அது எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் பொதுவா னது அல்லவா? எல்லா கல்வி நிறுவனங்களிலும் நன்னெறி போதிக்கப்படுகிறது என்று ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை ஏதாவது இருக்கிறதா? 
  • தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ மிஷனரி நிறுவனங்களால் கட்டாய மதமாற்றம் நிகழ்வ தாக கூறி வருபவர்கள் ஒரு தனிப்பட்ட சித்தாந்தம் கொண்ட அமைப்புகளும் தனிநபர்களும் தான் என்பது எங்கள் அனுபவம். இது ஒரு தீர்ப்பில் இடம்பெறுவதற்கு ஒரு அடிப்படை ஆதாரம் வேண்டாமா? 
  • நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சாதாரண ஏழை மக்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரத்தில் சிறந்த சேவையை வழங்கி வரும் கிறிஸ்தவ மிஷ னரிகளின் பங்கு மறைக்க முடியாது. ஏனெ‹ றால் அது வரலாற்றின் ஒரு பகுதி.
  • குடும்ப வன்முறை நிகழ்வு என்பது சர்வதேச அளவில் தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான நாடு களில் இதற்கான சட்டங்கள் இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களும் பல்வேறு வடிவில் இது இடம் பெற்றுள்ளது. அப்படி இருக் கையில் குடும்ப வன்முறை சட்டங்கள் இந்திய நாட்டில் பெண்களால் நேர்மையான முறையில் பயன்படுத்தவில்லை என்றும் ஆண் இனத்தை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின் றது என்பதும் ஏற்கனவே வன்முறையால் பாதிக் கப்பட்ட பெண்களின் மீது மீண்டும் இரண்டாம் முறையாக தொடுக்கப்படும் தாக்குதல் ஆகாதா?
  • ஒரு நீதிபதி தன்னிடம் வரக்கூடிய வழக்கு களை வைத்து மட்டும் சட்டம் துஷ்பிரயோகம் ஆகிறது என்று பொதுப்படையாக ஒரு முடிவுக்கு வர முடியுமா? இது நாட்டின் புள்ளி விவர ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்களுக்கு நேர்மறையானது அல்லவா?
  • ஒரு சட்ட பிரிவு துஷ்பிரயோகம் ஆகாமல் பார்க்க வேண்டிய கடமை காவல் துறையுடையது தானே. அதற்காக அந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோருவது எந்த விதத்திலும் பொருத்தமாக இருக்காது.   துஷ்பிரயோகம் ஆகாத சட்டங்கள் நாட்டில் உள்ளதா?  அதற்காக சட்டங்களை மாற்ற வேண்டுமென்றால் சட்டங்கள் இல்லாத உல கில்தான் நாம் வாழ முடியும்.
  • ஒரு நீதிபதியிடம் இருந்து வரக்கூடிய கருத் துக்களே சட்டம் ஆகிவிடும் என்ற சூழலில் அடிப்படை ஆதாரம் இல்லாத வழக்கில் எழுப் பப்படாத பிரச்சனைகள் மீது வெளிப்படுத்தும் இதுபோன்ற கருத்துக்கள் இன்றைய சமூக பொருளாதார அரசியல் சூழலில் ஏற்கனவே பாது காப்பற்ற ஒரு உணர்வு நிலையில் இருக்கும்சிறு பான்மை மக்களையும் அடக்கி வைக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டைகளாக உழன்று கொண்டிருக்கும் பெண்களையும் மேலும் வன்முறைகளுக்கு இலக்காக்கி விடாதா?
  • ஒரு நீதிபதி தனிப்பட்ட முறையில் ஒரு பிரச்சனை மீது ஒரு குறிப்பிட்ட பார்வை கொண்டி ருக்கலாம். ஒரு சித்தாந்தத்தை பின்பற்றலாம். ஆனால் நீதி பரிபாலனம் செய்யும் போது அரசி யல் சட்டம் என்ற மூக்கு கண்ணாடி அணிந்து தான் அந்தப் பார்வைக்கு தீர்வு சொல்ல முடியுமே தவிர ஏற்றத்தாழ்வான இந்த சமூக கட்டமைப்பின் கண்ணாடி மூலமாக அந்த பிரச்சனையை பார்ப்பது நீதிபரிபாலனத்திற்கு ஒவ்வாது.   
  • ஏற்கனவே சொன்ன உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒன்றில் கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் குழந் தைகள் உட்பட தலையிலிருந்து கால் வரை மறைக்கும் விதத்தில் உடை அணிந்து செல்ல வேண்டும் என்ற கருத்து மக்கள் மற்றும் ஜன நாயக அமைப்புகளின் எதிர்வினை ஆற்றலால் மேல்முறையீட்டில் ரத்து செய்யப்பட்டது என்பதை குறிப்பிட விரும்புகிறோம். மேல் முறை யீட்டை விசாரித்த நீதிபதிகள் வி. ராமசுப்பிரமணி யன், கே. ரவிச்சந்திர பாபு ஆகியோர் தனி நீதிபதி சொன்ன கருத்துக்கள் அவர் முன்வைக்கப்பட்ட வழக்கிற்கு சம்பந்தப்படாதது என்றனர். மேலும் தனி நீதிபதி கூறிய காரணங்கள் மீரட் வளர்ச்சி ஆணையர், authority வழக்கு தீர்ப்பில் சொல்லப்பட்ட எச்சரிக்கைக்கு எதிரானது என்ற னர். மீரட் வழக்கில் உச்சநீதிமன்றம் கீழ்க்கண்ட வாறு குறிப்பிட்டதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். நீதிமன்றங்கள் சோதிக்கப்படாத கண்ணிவெடி கள் கொண்ட சுரங்க வயல்களில் பயணிக்காமல் இருப்பது விவேகமானது. நாம் நம்முடைய விருப்பத்தைக் கூற வரவில்லை நாம் நம்முடைய மதிப்பீடுகளை சமூகத்தின் மீது திணிக்கக்கூடாது. அதுபோன்று செய்தால் அந்த தீர்ப்பு மதிப்பீடு அடிப்படையிலான தீர்ப்பாகிவிடும். மேலும் இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் ஒரு நீதி பதியாக இருந்து சொல்லவேண்டிய தீர்ப்புக்கு பதிலாக அவரின் சொந்த கருத்துக்கள் தீர்ப்பாக மாறிவிடும் அபாயம் உள்ளது. அதற்கு தனி நீதிபதியின் தீர்ப்பு ஒரு உதாரணம் என்று கூறி யுள்ளனர்.  மேலும் நீதிமன்றங்கள் தங்கள் முன் வைக்கப்படாத, இரு தரப்பினருக்கும் இல்லாத பிரச்சனைகளின் அடிப்படையில் சர்ச்சைகளை உருவாக்கி அதை விசாரணை செய்வது என்பது நீதிமன்றங்களிடமிருந்து எதிர்பார்க்காத ஒன்று என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே மேற்சொல்லப்பட்ட கருத்துக்களை நீதிமன்றமே முன்வந்து தாமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முன்வைக்கிறது.