tamilnadu

img

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் உயர் நீதிமன்றத்தை அணுகமுடியவில்லையா?

மக்கள் உயர்நீதிமன்றத்தை அணுகுவதில் சிரமம் இருப்பதாகப் புகார்கள் வந்திருப்பது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை அனுப்பிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.

குழந்தைகள் உரிமைகள் ஆர்வலர் இருவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், உச்சநீதிமன்றத்தில் திங்கள் அன்று மக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தை அணுகமுடியவில்லை என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புகார் செய்தார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், “மக்கள் நீதிமன்றத்தை அணுகமுடியாத நிலை இருக்குமானால் அது மிக மிக ஆழமான விஷயம்” என்று கூறினார். மேலும் அவர் இது தொடர்பாக, “நானே ஸ்ரீநகர் சென்று பார்ப்பேன்.” என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவர் இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கை அனுப்புமாறு கட்டளையிட்டுள்ளார்,