tamilnadu

img

ஆணவக் கொலையை தடுக்காவிடில் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை

சென்னை, ஜுலை 30- ஆணவப் படுகொலைகளை தடுக்கத் தவறினால், காவல் துறை உயர் அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது.  ஆணவக் கொலைகள் தொடர்  பாக பத்திரிகையில் வெளியான செய்திகளை அடிப்படையாக கொண்டு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மணிகுமார் மற்  றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு  தாமாக முன் வந்து வழக்கை பதிவு  செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை செவ்வா யன்று (ஜூலை 30) மீண்டும் விசா ரித்த நீதிபதிகள், அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுக்கு என தனியாக  காவலர்கள் இல்லை. எனவே,  சட்டம்- ஒழுங்கு வழக்குகளை விசாரிக்கும் காவலர்களே ஆண வப் படுகொலை வழக்குகளை யும் விசாரிப்பதாக அரசுத் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் பணியில் உள்ள காவலர்களை கொண்டு அமைக் கப்பட்டது எப்படி சிறப்புப் பிரி வாக கருத முடியும்? என நீதிபதி கள் கேள்வி எழுப்பினர். ஆணவக் கொலைகள் தொடர்  பான வழக்குகளை விசாரிக்க தனி பிரிவு ஏற்படுத்தி, அத்தகைய  படுகொலைகளை தடுக்க  நடவ டிக்கைகள் எடுக்க வேண்டும். ஆணவக் கொலைகள் தொடர் பான புகார்கள் வந்தால் விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தமிழகம் முழுவதும் ஆணவப் படுகொலை தொடர்பாக காவல்  நிலையங்களில் எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன? உச்சநீதிமன்ற உத்  தரவுக்கு பிறகு எத்தனை வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு நடவ டிக்கை எடுக்கப்பட்டது? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆணவ கொலைகளை தடுக்க  நடவடிக்கை எடுக்கத் தவறினால், காவல்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு  உத்தரவிடப்படும் என  நீதிபதிகள் எச்சரித்தனர். ஆண வக் கொலைகள் தொடர்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்பு ணர்வு வழங்குவதால் என்ன பயன்? எனவும் கேள்வி எழுப்பி னர். இந்த வழக்கில்  புதனன்று (ஜூலை31) இடைக்கால உத்தரவு கள் பிறப்பிக்க உள்ளதாக கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.