தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
சென்னை,ஆக. 31- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் விசா ரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவ தற்காகத் தமிழக அரசு, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமை யில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மற்றும் பலி யானவர்களின் உறவினர்களிடம் விசா ரணை நடத்தப்பட்டது. இவர்களின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டன. 3 மாதங்க ளில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கும்படி அரசு உத்தரவிட்டிருந்தது. பிப். 22 வரை நீட்டிப்பு ஆனால் ஆணையம் தனது விசாரணையை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், ஆணை யத்தின் பதவிக்காலம் அடுத்தடுத்து நீட்டிக்கப் பட்டது. அவ்வகையில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பதவிக் காலம் கடந்த 22ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. இதையடுத்து, ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதத்திற்கு, அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் மூன்றா வது முறையாக ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.